17 Sept 2024

ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் வென்றால் ஆறு மாத காலத்திற்கு கூட இந்த நாட்டை கொண்டு செல்ல முடியாது -இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா

SHARE

ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் வென்றால் ஆறு மாத காலத்திற்கு கூட இந்த நாட்டை கொண்டு செல்ல முடியாது  -இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா.

ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் வென்றால் ஆறு மாத காலத்திற்கு கூட இந்த நாட்டை கொண்டு செல்ல முடியாது மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவை தேடி வர வேண்டிய நிலை ஏற்படும் தேசிய மக்கள் சக்தி  கடந்த காலங்களில் கிளர்ச்சிகளால் நாட்டை சீரழித்தவர்களே  தவிர ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளும் அவர்கள் முன்னெடுப் பதில்லை என  இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார். 

செவ்வாய்கிழமை(17.09.2024) மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர மேலும் குறிப்பிடுகையில் 

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரங்களின் போது அதிகமான மக்கள்  அவர்களின் பிரசாரப் பேச்சை கேட்பதற்காக வருவதுண்டு ஆனால் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை அவர்களின் கவர்ச்சியான பேச்சை கேட்பதுண்டு கேட்டு காதலிப்பதுண்டு ஆனால் அவர்களை திருமணம் செய்வதில்லை அவர்களது தேர்தல் பிரசார மேடைகளில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் கனவுலகில் தான் நடக்குமே தவிர நிஜ உலகில் சாத்தியம் இல்லை. 

இதனால் அவர்களுக்கு வாக்கு வழங்குவது இல்லை ஏணைய அரசியல் தலைவர்களை எதிர்ப்பதோடு நாட்டை சீரழிப்பதற்காகவே அவர்களது செயற்பாடு உள்ளது கடந்த காலங்களில் கிளர்ச்சிகளால் நாட்டை சீரழித்தவர்களை தவிர ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளும் இவர்கள் முன்னெடுப்பதில்லை இறுதிக்கட்ட அரகலையின் போது பாராளுமன்றத்திற்கு தீ மூட்டை இருந்தவர்கள் பங்களாதேஷில் இடம் பெற்றது போன்று இங்கும் பல அரச சொத்துக்கள் நாசமாக்கப்பட விருந்தது அவர்களால் நாட்டுக்கு அதிகளவிலான அழிவுகளை ஏற்பட்டுள்ளது.  

ஒருவேளை இந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தோற்றுவிட்டால்  அரசியலுக்காக அல்ல நாட்டு மக்களுக்காக எணைய ஜனாதிபதி வேட்பாளர்கள் வென்றால் ஆறு மாத காலத்திற்குகூட இந்த நாட்டை கொண்டு செல்ல முடியாது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க வென்றால்தான் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு விடயத்தில் அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அதனை வென்றெடுத்து அனைவருக்கும் சம்பள உயர்வினை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வழங்குவார். 

வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் ஆனால் ஏணைய ஜனாதிபதி வேட்பாளர்கள் வென்றால்  திட்டங்களும் நிறுத்தப்பட்டு இன்று பங்களாதேஷ் நாடு உள்ளது போன்று மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவை தேடி வர வேண்டிய நிலை ஏற்படும்.  என அவர் இதன்போது மேலும்தெரிவித்தார்.



   

SHARE

Author: verified_user

0 Comments: