4 Sept 2024

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற தபால் மூலமான வாக்களிப்பு.

SHARE

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற தபால் மூலமான வாக்களிப்பு.

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்பு புதன்கிழமை(04.09.2024) நடைபெற்றது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் பொலிசார், இதன்போது அர்களது பொலிஸ் நிலையத்தில் விசேடமாக அமைக்கப்பட்ட தேர்தல் வாக்களிப்பு நிலையத்தில் தமது தபால் மூலமான வாக்களிப்புக்களைப் பதிவு செய்திருந்தனர். 

அந்த வகையில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுகின்ற பொலிசார் இதன்போது தமது தபால் மூலமான வாக்குகளை இன்றயத்தினம் அளித்திருந்தனர். 

இதன்போது களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரி.அபயவிக்கிரம உள்ளிட்ட பொலிசார் கலந்து கொண்டனர்.






SHARE

Author: verified_user

0 Comments: