16 Jul 2024

கொள்கலன்களுடன் பண்ணையார்கள் ஆர்ப்பாட்டம்.

SHARE

மில்கோ பால் சேகரிப்பு நிறுவனத்தை தனியாருக்கு வழங்க வேண்டாம் பால் கொள்கலன்களுடன் பண்ணையார்கள் ஆர்ப்பாட்டம்.

மில்கோ பால் சேகரிப்பு நிறுவனத்தை தனியாருக்கு வழங்கவுள்ளதாகத் தெரிவித்து பால் பண்ணையாளர்கள் செவ்வாய்கிழமை (16.07.2024) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.                                

முதலில் மட்டக்களப்பு எருவில் பால் சேகரிப்பு நிலையத்தைச் சேர்ந்த பாற் பண்ணையாளர்கள் பால் சேகரிப்பு நிலையத்திலிருந்து, பால் கொள்கலன்களுடன், அருகிலிருந்த கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு முன்னால் ஒன்றுகூடி தேங்காய் உடைத்து, கோசங்களை எழுப்பியவாறு எதிர்ப்பினை தெரிவித்தனர்.

இதுவரை காலமும் எதுவித தடைகளும் இன்றி மில்கோ பால் சேகரிப்பு நிலையத்திற்கு நாம் பாலை வழங்கி கொண்டு வருகிறோம் அதால் எமக்கு இதுவரையில் எதுவித இடர்பாடுகளும் இல்லை . எமக்கு மில்கோ நிறுவனம் வாராந்தம் முறையாக எமக்குரிய கொடுப்பனவு வழங்குகிறது. மேலும் எமக்கு பிள்ளைகளின் கற்றல், மரணச் செலவு, திருமணச்செலவு, உள்ளிட்ட பல செலவுகளுக்கும் மில்கோ நிறுவனத்தின் மேலதிக உதவிகளை நல்கி வருகின்றனர்.எனவே இவ்வாறான நிறுவனத்தை தனியாருக்கு வழங்குவதை நாம் முற்றாக எதிர்கிறோம் எனவே  இந்த விடயத்தை கருத்தில் கொண்டு மில்கோ நிறுவனத்தை தனியாருக்கு வழங்குவதை நிறுத்தா விட்டால் எமது போராட்டம் மேலும் தொடரும் என இதன்போது பாற் பண்ணையாளர்கள் கருத்து தெரிவித்தனர். 

இந்நிலையில் மட்டக்களப்பு மண்டூர் பகுதியில் அமைந்துள்ள பால் சேகரிப்பு நிலையத்தைச் சேர்ந்த பண்ணையாளர்களும், மில்கோ நிறுவனத்தை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தனர்.





 




 


SHARE

Author: verified_user

0 Comments: