14 Jun 2024

புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி.

SHARE

சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு  தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து  ஏற்பாடு செய்ய விழிப்புணர்வு பேரணியானது புதன்கிழமை(2024.06.12) இடம்பெற்றது.

நண்பா போதைக்கும் புகைத்தலிற்கும் முற்றுப்புள்ளி வைப்போம். வலுவான தேசம் ஒன்றினை நிதமும் கட்டியெழுப்புவோம்எனும் தொனிப்பொருளின் கீழ் மகிழூர்முனை சக்தி வித்தியாலய முன்றலில் ஆரம்பமான பேரணியில் புகைத்தல் மற்றும் போதை பழக்கத்தினால் ஏற்படும் பாதக விளைவுகளை குறிக்கும் பதாதைகளை ஏந்தி கோசங்களையெழுப்பிய வண்ணம் மகிழூர் பொது மைதானத்தை அடைந்ததும் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

 கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் .மோகனதாசன் அவர்களின் நெறியாள்கையில் 'ஆடல் நிலம்வழங்கிய  “விரல் இடுக்கில் கசியும் உயிர்" எனும் தலைப்பிலான புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு வீதி நாடகம் இதன்போது ஆற்றுகை செய்யப்பட்டர். 

இந்த பேரணியில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள்,  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

இந்நிலையில் அவ்வீதி நாடகம் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பிரதேச செயலக முன்றலிலும் அங்கிருந்த பொதுமக்கள், மற்றும் உத்தியோகஸ்த்தல் முன்னிலையிலும் ஆற்றுகை செய்யப்பட்டதுடன், அதில் பங்குகொண்ட பல்கலைக் கழக மாணவர்களுக்கு பிரதேச செயலக அதிகாரிகளால் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன
















SHARE

Author: verified_user

0 Comments: