14 Jun 2024

கிழக்கிலங்கையில் முருக வழிபாடும் வரலாறும் வழமைகளும் நூல் வெளியீட்டு நிகழ்வு.

SHARE

இலங்கைத் திருநாட்டின் இன மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கதிர்காம முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு ஆரம்பமாக உள்ள நிலையில் வடக்கிலிருந்து கால்நடையாக தற்போது அடியார்கள் கிழக்கு மாகாணத்திற்கு வந்துள்ளனர்.

கலாநிதி வா.குணபால சிங்கம் எழுதிய கிழக் கிலங்கையில் முருக வழிபாடும் வரலாறும் வழமைகளும் எனும்  நூல் வெளியீட்டு நிகழ்வு  கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகிய கற்கை நிறுவகத்தில் கிழக்கு பல்கலைக்கழக புவியியல் துறை.விரிவுரையாளர் மு.ராஜரத்தினம் தலைமையில் வெள்ளிக்கிழமை(14.06.2024) இடம்பெற்றது.

இதன்போது கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வா.கனகசிங்கம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மேலும் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் திருமதி பாரதி கென்னடி, மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இலக்கியவாதிகள் மாணவர்கள் பொதுமக்கள் என பாலர் கலந்து கொண்டர்.

இந்நிகழ்வில் வரவேற்புரையை நா.வாமணன் அவர்களும், நூல் அறிமுக உரையை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் நா.சுபராஜ் அவர்களும், நூலின் மதிப்புரையை பேராசிரியர் திருமதி. அம்மன்கிழி முருகதாஸ் அவர்களும், நிகழ்த்தினர்.

இந்நூல்  கல்வி பொதுத் தராதர உயர்தரத்தில் கலைப்பிரிவில் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பெரிதும் உதவவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



















SHARE

Author: verified_user

0 Comments: