மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற 73 வது சுதந்திர தின நிகழ்வு.
இலங்கைத் திருநாட்டின் 73 வது சுதந்திர தின நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் வியாழக்கிழமை(04) காலை 8.00 மணியளவில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றியவாறாக மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
முதல் நிகழ்வாக தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டதனைத் தொடர்ந்து மத அனுஸ்டானங்களுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் தேசிய சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தியதான உரையினை அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்கள் நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment