இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.ஐ.டி. எச்.இல் சிகிச்சை பெற்று வந்த 47 வயதான பெண் ஒருவரே உயிரிழந்தாாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 12 மரணங்கள் பதிவாகியுள்ளன.
உயிரிழந்தவர் புற்று நோய், இருதய மற்றும் நீரிழவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குவைத் மற்றும் சென்னையில் இருந்து நாடு திரும்பிய தலா 2 பேரும் அதில் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment