மட்டக்களப்பு றோட்டரிக் கழகத்தின் 60வது புதிய தலைவராக வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன் தெரிவு.
மட்டக்களப்பு றோட்டரிக் கழகத்தின் 60வது புதிய தலைவராக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள், பிரதி உப வேந்தரும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்றியல் பெண்நோயியல் நிபுணருமான வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன் தெரிவு செய்யப்பட்டு பதவியேற்றுள்ளார்.
மட்டக்களப்பு றோட்டரிக் கழகத்தின் 60வது புதிய தலைவருக்கான தெரிவு மட்டக்களப்பு பயணியர் வீதியில் அமைந்துள்ள றோட்டரிக் கழக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை 20.10.2019 இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா பிரதம அதிதியாகவும், றோட்டரியின் துணை ஆளுநர் எம்.பத்மநாதன் அதன் செயலாளர் வைத்திய கலாநிதி சுகுணன் உட்பட கழக அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் புதிய தலைவருக்கு முன்னாள் தலைவர் வி.பார்த்தீபன் பொறுப்புகளைக் கையளித்ததோடு துணை ஆளுநர் பத்மநதாதன் றோட்டரி தலைமைத்துவச் சின்னத்தை வழங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கழகத்திற்கு புதிய அங்கத்தவர்கள் இணைக்கும் நிகழ்வும் வைபவ ரீதியாக சின்னம் அணிவித்து நிகழ்த்தப்பட்டதுடன் அதிதியாக வருகை தந்திருந்த அதிதிகளுக்கு புதிய தலைவரினால் நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், இவ் 60 வது வருட பூர்த்தியை முன்னிட்டு பல்கலைக்கழகத்தற்குத் தெரிவான மாணவர்களுக்கு அவர்களது பல்கலைக்கழகக் கல்வி ஊக்குவிப்புக்காக புலமைப்பரிசில் திட்டமும் வழங்கி வைக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment