ரோட்டரி திருகோணமலைக்கு ரோட்டரி 3220 ஆளுநர் வருகை
ரோட்டரி இலங்கை மாவட்ட - 3220 ஆளுநர் துஷான் சொசா ( Dusha Soza திருகோணமலை ரோட்டரி கழகத்துக்கு விஜயம் செய்தார்.
ஆளுநநரின் செயலார் திரு கிரிஷாந்த பெரேரா அவர்களும் அவருடன் இணைந்து கொண்டார் .
திருகோணமலை ரோட்டரி கழக தலைவர் - அருட் தந்தை லக்ஷ்மன் பீரிஸ் விருந்தினர்களை வரவேற்றார் .
செயலாளர் ரகுராம் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைகள் பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தைகொடுத்தார்.
துவி சக்கர வண்டி ஓன்று கத்தியை தீட்டும் வியாபாரி ஒருவருக்கு அவரது தொழிலை மேம்படுத்த வழங்கப்பட்டது.
20 வருடங்களுக்கு அதிகமாக சேவையாற்றிய 12 ரோட்டரி அங்கத்தவர்கள் கௌரவிக்கப் படடார்கள்.
ஆளுநர் துஷான் சொசா ( Dusha Soza ) திருகோணமலை ரோட்டரி கிளப் நடவடிக்கைககளை பாராட்டியதுடன் மேலும் அதிக உறுப்பினர்களை சேர்க்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
2019-2020 வருடத்துக்கான தலைவராக தெரிவு செய்யப்படட திரு உதய ராஜன் நன்றியுரை நிகழ்த்தினார்.
0 Comments:
Post a Comment