மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து திங்கட்கிழமை முற்பகல் முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட ஏழு இளைஞர்களும் ஒரு பெண்ணும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை முற்பகல் மட்டக்களப்பு பொலிஸ் தலைமைய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றதகவலின் அடிப்படையில் வீடு ஒன்றை முற்றுகையிட்டபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தாண்டவெளி,பாரதீ வீதி இரண்டாம் குறுக்கு தெருவில் உள்ள வீடு ஒன்றில் இளைஞர் குழுக்களின் அட்டகாசம் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த நிலையில் அது தொடர்பான தகவல்கள் மட்டக்களப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு பொலிஸ் குழுக்கள் திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டதுடன் அங்கிருந்து பெண் ஒருவரையும் ஏழு இளைஞர்களையும் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் அனைவரும் உயர்தரம் கற்று வருபவர்கள் எனவும் அவர்கள் குறித்த வீட்டில் கஞ்சா,சிகரட்டுகள் போன்ற போதைப்பொருட்களும் பாவித்து வந்துள்ளனர்.கைதுசெய்யப்பட்ட பெண் 27 வயதுடையவர் எனவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சுற்றிவளைப்பின்போது ஆண் உரைகள்,கஞ்சா உட்பட பொருட்களையும் மீட்டுள்ளதுடன் வீட்டில் இருந்தவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் கல்வி கற்பதற்காக வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று குறித்த பெண்றோர் தனது மகனை கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில் தனது நண்பர்களை இணைத்துக்கொண்டு இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுவந்துள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருவதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment