17 Oct 2017

புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தத்தில் சிறுபான்மை பெரும்பான்மை அற்ற முழு இலங்கைக்கும் அனைவரும் உரித்து என்ற பொறிமுறையை நோக்கி சிறுபான்மை சிந்திப்பதே சிறந்தது. தேசிய சமாதானப் பேரவை வளவாளர் சட்டத்தரணி கே. ஐங்கரன்

SHARE
புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தத்தில் சிறுபான்மை பெரும்பான்மை அற்ற முழு இலங்கைக்கும் அனைவரும் உரித்து என்ற பொறிமுறையை நோக்கி சிறுபான்மை சிந்திப்பதே சிறந்தது என தேசிய சமாதானப் பேரவை வளவாளர் சட்டத்தரணி கே. ஐங்கரன் தெரிவித்தார். 
புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தறிக் குழு அறிக்கைதொடர்பாக மாவட்ட சர்வ மதப் பேரவை உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டும் கருத்தரங்கு “Dialogue on constitutional reform process in Sri Lanka for District Inter Religious Committee(DIRC) members in Batticaloa under the project of “Inter-faith and inter-ethnic dialogue in Sri Lanka”. ஞாயிற்றுக்கிழமை 15.10.2017 மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதி;யில் இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

தேசிய சமாதானப் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் “இலங்கையில் அனைத்து மதங்கள் மற்றும் அனைத்து இனங்களுக்குமிடையிலான கலந்துரையாடல்”  எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதான வளவாளராகக் கலந்து கொண்டு மேலும் விளக்கமளித்த அவர்@

அரசியல்வாதிகள் தங்களுடைய இருப்புக்காகவும், அரசியல் காரணங்களுக்காகவும், பூகோள அரசியலின் நிலைமைகளுக்கேற்ற விதத்திலும் அந்தத் தருணத்திற்கு ஏற்ற மாதிரி நிலைமைகளை உருவாக்கிக் கொள்வார்கள்.
ஆனால் மக்களாகிய நாங்கள் அவர்கள் இழுக்கும் பக்கமெல்லாம் அசைந்தாட முடியாது.
என்னுடைய இன அடையாளம் அவருடைய இன அடையாளம் எந்த அந்தஸ்தில் இருக்க வேண்டும் என்று வேறெதற்கோ வாதாடாமல் எல்லோரும் சமனாக அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்றுதான் மக்கள் திடமான உறுதியான நிலைப்பாட்டில் இருந்து கொள்ள வேண்டும்.

இலங்கையில் இடத்துக்கேற்ற பெரும்பான்மை ஆட்சியும் நிருவாகமும் என்று கோரும்பொழுது அந்தப் பிரதேசத்திற்கு அப்பாற்பட்ட இடத்தில் நமக்கு எந்த வித உரிமையும் இல்லை என்றாகிவிடுகின்றது.

அவ்வாறான போக்கே தேசிய அரசியலிலும் பிரதிபலிக்கும். அது ஆபத்தானது. பிரதேசத்தவர்கள் பெரும்பான்மை என்றால் தேசிய அரசியலில் பெரும்பான்மைக்கான அங்கீகாரம் இயல்பாகவே கிடைத்து விடும்.
இலங்கை என்ற ஒரு நாட்டுக்குள் பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களான தாங்கள்தான் என்று அவர்கள் கூறுவது தர்க்கத்தின்படி சரியாகிவிடும்.
ஆகவே இலங்கையில் வாழ்கின்ற மற்றைய சிறுபான்மைகள் அப்படியான ஒரு போக்கை வலியுறுத்திக் கொண்டு செல்லப் போகிறோமா அல்லது எந்தவொரு சிறுபான்மையும் எங்கேயும் பாதிக்கப்படக் கூடாது என்கின்ற பொறிமுறையை வலியுறுத்தப் போகின்றோமா என்ற மிகப் பெரிய வரலாற்றுக் பொறுப்பு நம்முன்னே உள்ளது.

அரசியலமைப்பானது ஒவ்வொரு பிரஜையின் அடிப்படை உரிமைகளும் கௌரவமும் பேணிப்பாதுகாக்கப்படும்படியாக உருவாக்கப்பட்டால் அத்தகைய பொறிமுறை அனைவரின் உரிமைகளையும் சமமாகவே பாதுகாக்கும் என்பதுதான் புதிய அரசியலமைப்பின் நோக்கமாக இருக்க வேண்டும்.
துரதிருஷ‪;டவசமாக இலங்கையில் அரசியல் யாப்பை உருவாக்கியவர்கள் நாட்டு நலன் நாட்டு மக்களின் நலனைப் புறக்கணித்து விட்டு தங்களுடைய கட்சி நலனுக்காகவே அதனை வடிவமைத்தார்கள். இலங்கைக்கான அரசியல் யாப்பு எதுவும் இதுவரை உருவாக்கப்படவில்லை.

ஆனால், 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பை உருவாக்கியவர்கள் இப்பொழுது அதனை எதிர்க்கின்றார்கள். அதனை அப்பொழுது எதிர்த்தவர்கள் இப்பொழுது ஆதரிக்கின்றார்கள். இதுதான் அவர்களது உண்மைத் தோற்றமும் இலங்கையர்களின் துரதிருஷ்டமுமாகும்.

இலங்கை தேசியக் கொடி தேசிய கீதம் என்பன சர்ச்சைக்குரிய ஒன்றாக இருக்கின்ற அதேவேளை, ஜப்பானில் தேசியக் கொடி வெள்ளைத் துணியில் ஒரு சிவப்பு வட்டம் ஆனால் அங்கு எல்லா மதத்தவர்களும் இனத்தவர்களும் வாழ்கின்றார்கள்.

பூமி புத்திரர் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தாங்கள்தான் இந்த இலங்கை மண்ணின் மைந்தர்கள் என்று சிங்களவர்கள் கருதுகிறார்கள்.
அதனால் இந்த நாடு தங்களுக்குத்தான் சொந்தமானது என்று அவர்கள் வாதிடுகின்றார்கள். அதனால்தான் இத்தனை குழப்பங்களும் இழப்புக்களும் நம்மைச் சூழ்ந்துள்ளன.” என்றார்.











SHARE

Author: verified_user

0 Comments: