கிழக்கு மாகாண மக்களின் வாழ்வு மேம்பாட்டுக்;காக பொருளாதார வலுவூட்டல் தேவையாகவுள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் வளர்;ச்சித் திட்டங்கள் பற்றி திங்கட்கிழமை 21.08.2017 கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இதனைக் கூறினார்.
தொடர்ந்து கிழக்கு மாகாண செயற் திட்டங்கள் பற்றித் தெரிவித்த அவர்
கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான மாகாண நிருவாகம் அந்த மாகாண சபையின் அமைச்சர் வாரியம் என்பன அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றது.
பிரதமந்திரியின் ஆதரவு, வழிகாட்டல் தலைமைத்துவத்தின் கீழ் ஜனாதிபதியின் வழிநடத்தல் என்பனவற்றுடன் எதிர்காலத்தில் கிழக்கு மாகாண மக்கள் வலுவூட்டப்பட்டு அவர்களின் வாழ்வில் பொருளாதாரத்தில் சமூக அந்தஸ்தில் மறுமலர்ச்சி ஏற்படும் என்று நம்புகின்றோம்.
பொருளாதாரம், சுகாதாரம், கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சம்பந்தமான முன்மொழிவுகளின் வரைவுகள் ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்டிருக்கின்றன.
இதுபற்றி கலந்தாலோசிக்கப்பட்டு முதலமைச்சரின் வழி நடத்தலில் மத்திய அமைச்சர்களின் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளது. அதனுடாக சிவில் சமூகத்திற்கான சேவைகளை கிழக்கு மாகாணத்தில் சிறப்பாக செய்ய முடியும் என்று எதிர்பார்க்கின்றோம்.”
0 Comments:
Post a Comment