31 Aug 2017

ஹெரோயின் போதைப் பொருள் விற்பனைச் சந்தேக நபர்கள் மூவருக்கும் விளக்கமறியல்

SHARE
(ஏ.ஹுஸைன்)

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தாமரைக்கேணி ஏறாவூர் நகர் மற்றும் மீராகேணி போன்ற இடங்களில் ஏக காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையின்போது ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் எதிர்வரும் செப்ரெம்பெர் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை 30.08.2017 இச்சந்தேக நபர்களை ஏறாவூர் பொலிஸார், ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி Additional Magistrate and Additional District Judge Muhammath Ismail Muhammath Rizvi  இந்த உத்தரைவைப் பிறப்பித்தார்.

பொதுமக்களிடமிருந்து தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து திடீர் ஒருங்கிணைந்த தேடுதலை மேற்கொண்ட பொலிஸார் இவர்களைக் கைது செய்ததோடு சந்தேக நபர்களிடமிருந்து ஹெரோயின் போதைப் பொருட்களையும் கைப்பற்றியிருந்தனர்.

ஒதுக்குப்புறக் கிராமங்களிலுள்ள இளைஞர்களையும் சிறுவர்களையும் இலக்கு வைத்து இத்தகைய போதைப் பொருள் விநியோகம் இடம்பெற்று வருவதாக சமூக நல செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் குற்றவாளிகளாகக் காணப்படுமிடத்து அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டாலேயே அடுத்தவர்கள் திருந்துவார்கள் என்றும் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: