4 Mar 2017

மீனவ மக்களிடம் தோணிகள் வலைகள் வாழ்வாதார உதவியாகக் கையளிப்பு

SHARE
கிழக்கு மாகாண முதலமைச்சரின நிதி ஒதுக்கீட்டில் ஏறாவூர் வாவி மீனவர் சமூக மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வெள்ளிக்கிழமை 03.03.2017 வழங்கி வைக்கப்பட்டன.

மீனவர்களுக்கான வாழ்வாதார உதவியாக 10 வாவி மீன்பிடித் தோணிகளும், 61 வலைகளும் 27 மீனவக் குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் உட்பட அமைச்சு அதிகாரிகள் உள்ளுராட்சித் திணைக்கள அதிகாரிகள் பொதுமக்கள் பயனாளிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.






SHARE

Author: verified_user

0 Comments: