3 Mar 2017

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின், வலயக்கல்விப் பணிப்பாளராக அகிலா கனகசூரியம் கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.

SHARE
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின், வலயக்கல்விப் பணிப்பாளராக அகிலா கனகசூரியம் இன்று(02) தமது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய .சத்தியநாதன் ஓய்வுபெற்று சென்றதையடுத்து, குறித்த பதவிக்கான வெற்றிடம் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல், பதில் கடமையையினை மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் .பாஸ்கரன் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் குறித்த பதவிக்கு அகிலா கனகசூரியம் நியமிக்கப்பட்டு இன்று தனது கடமையையும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

குறித்த வலயக்கல்விப் பணிப்பாளர் மாகாண கல்வி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளாராகவும், மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளாராகவும் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கடமைபொறுப்பேற்பின் போது, பதில் கடமை வலயக்கல்விப் பணிப்பாளர் .பாஸ்கரன் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்




SHARE

Author: verified_user

0 Comments: