மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட எல்லைப்புற கிராமமான சின்னவத்தையில் இன்று (01) இராசமாணிக்கம் இலவச கல்வி நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் மூலம் பல சமூக சேவைகள் மக்களுக்கு செய்யப்பட்டு
வருகின்ற நிலையில் அமைப்பின் முதலாவது கல்வி நிலையம் சின்னவத்தை கிராமத்தில் இன்று மாணவர்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் பணிப்பாளர் திரு.இ.சாணக்கியன் அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் கிராம சேவையாளர், ஊர்மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது பணிப்பாளர் சாணக்கியன் அவர்களின் சேவையினைப் பாராட்டி அவர்களுக்கு வாழ்த்துமடல் வழங்கி கௌரவித்தனர்.
0 Comments:
Post a Comment