மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய 19 வயதிற்குட்பட்ட பெண்கள் கபடி அணியினர் பாடசாலைகளுக்கிடையிலான கபடிப் போட்டியானது கடந்த 10.09..2016ம்திகதி
மாத்தறையில் இடம்பெற்றதில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டார்கள். இப்போட்டிக்கு மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களான இ.புவேந்திரகுமார் மற்றும் கி.கிருஷ்ணராஜன் மற்றும் அணிக்கான உதவிகளை செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு மற்றும் பழுகாமம் சூட்டிங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினருக்கு நன்றிகளை தெரிவிப்பதாகவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பாடசாலை அதிபர் சு.உதயகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment