25 Sept 2016

துறைநீலாவணை பிரதானபாதையின் இரு மருங்கிலும் பாரிய சிரமதானபணி

SHARE
 (துறையூர் தாஸன்)

துறைநீலாவணை முன்னேற்றமையப் படுத்தல் அமைப்பின் ஒழுங்கமைப்பில் துறைநீலாவணைக் கிராமத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் நோக்குடன் பல நடிவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வேளையில் அதன் ஒரு நடவடிக்கையாக அவ்வமைப்பு சமுர்த்திவாழ்வின் எழுச்சி அபிவிருத்தி
உத்தியோகத்தர்களுடன் இணைந்து பாரியசிரமதானப் பணி ஒன்றினை சனிக்கிழமை (24) மேற்கொண்டிருந்தது.

பெரியநீலாவணை சந்தியில் இருந்து துறைநீலாவணை கிராமத்துக்குச் செல்லும் பிரதானபாதையின் இரு பக்கங்களிலும் பிரதான பாதையையும் சுத்தம் செய்யும் ஆரோக்கியமான நிகழ்வை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது துறைநீலாவணை முன்னேற்ற மையப்படுத்தல் அங்கத்தவர்கள், சமுர்த்தி பயனாளிகள், மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.







SHARE

Author: verified_user

0 Comments: