தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தில் காசாளர்
கருமபீடம் (Cashier Point) பிராந்திய முகாமையாளர் எந்திரி டி.ஏ.பிரகாஷினால் இன்று திங்கட்கிழமை (05) காசாளர் கருமபீடம உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள இக்கருமபீடத்தில் நீர் சிட்டைகட்டணம் (Water Bill Payment), புதிய நீர் இணைப்புக்கான கட்டணம், மீள் இணைப்பு கட்டணம், பவுசர் மூலம் நீர் பெறுவதற்கான கட்டணம் போன்ற சபையின் சகல கொடுப்பனவுகளையும் கிழமை நாட்களில் காலை 09.00 மணி தொடக்கம் பி.ப. 03.00 மணிவரை பொதும்ககள் மேற்கொள்ள முடியும். இதன் மூலம் இதுவரை காலமும் பாவனையாளர்கள் எதிர் நோக்கிவந்த பல அசௌகரியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பிராந்திய முகாமையாளர் எந்திரி டி.ஏ.பிரகாஷ் தெரிவித்தார்.
காசாளர்கருமபீட ஆரம்ப நிகழ்வில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் பொறியியலாளர்கள்இ கணக்காளர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment