16 Sept 2016

யெகோவாவின் சாட்சிகளின் மாநாடு

SHARE
(யெகோவாவின் சாட்சிகளின் மாநாடு எதிர்வரும் 16-18 திகதிகளில் வவுனியாவில
உள்ள கலாசார மண்டபத்தில் நடைபெற உள்ளது. அந்த மாநாட்டின் தலைப்பு “யெகோவாவுக்கு உண்மையாக இருங்கள்”.

இந்த மாநாட்டில் குடும்பங்களுக்கு இளைஞர்களுக்கு பெற்றோருக்கு பிள்ளைகளுக்கு என அனைத்து தரப்பினர்களுக்கும் தேவையான தகவல்கள் அடங்கிய சொற்பொழிவுகள் இடம்பெறும். இந்த மாநாட்டின் முக்கிய சொற்பொழிவு “உண்மையான அன்பு பகையை வெல்லும்- எப்போது?” அத்தோடு இந்த மாநாட்டில் இரண்டு நாடகங்களும் இருக்கும். அவற்றில் ஒன்றின் தலைப்பு “கண்களால் பார்க்காததை எதிர்பார்த்திருங்கள்” என்பதாகும். )

இப்படியாக எல்லா பொதுமக்களுக்கும் ஏற்ற தகவல்கள் இந்த மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் அடங்கியிருப்பதால் இந்த மாநாட்டை பற்றி பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்காக உங்களுடைய பத்திரிகையில் இந்த மாநாடு சம்பந்தமான தகவல்களை பிரசுரித்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். 

இப்படிக்கு 

மாநாட்டுக்குழு 
செய்திச்சேவை. 

குறிப்பு:- (இந்த மாநாட்டைப்பற்றி கூடுதலாக தெரிந்து கொள்வதற்கு www.jw.org  என்ற இணையத்தளத்தில் மாநாடுகள் என்ற தலைப்பில் பார்வையிடவும்.)

SHARE

Author: verified_user

0 Comments: