14 Sept 2016

காத்தான்குடி கடற்கரையில் இறந்த நிலையில் 5 அடி நீளமான திமிங்கிலம் மீட்பு

SHARE
மட்டக்களப்பு – புதிய காத்தான்குடி கடற்கரையில் புதன்கிழமை (செப்ரெம்பெர் 14, 2016)
காலையில் இறந்த நிலையில் கரையொதுங்கிக் கிடந்த சுமார் 5 அடி நீளமான திமிங்கிலம் ஒன்று மீனவர்களால் கண்டு பிடிக்கப்பட்டது.

இந்தத் திமிங்கலம் ஆழ் கடலில் விபத்துக்களில் சிக்கி இறந்து விட்ட நிலையில் கரையொதுங்கியிருக்கலாம் என மீனவர்கள் ஊகம் தெரிவிக்கின்றனர்.

சிதைவடைந்த நிலையில் காணப்பட்ட இந்தத் திமிங்கிலத்தை காத்தான்குடி நகரசபையினர் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்திக் கொண்டு போயுள்ளனர்.
கப்பல்களில், விசைப்படகுகளில், அல்லது கற்பாறைகளில் அடிபட்டு பெரிய மீன்கள் அவ்வப்போது இறந்து கரையொதுங்குவதுண்டு என மீனவர்கள் தெரிவித்தனர்.




SHARE

Author: verified_user

0 Comments: