13 Aug 2016

மட்டு.களுவாஞ்சிகுடியில் நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு

SHARE
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான
மற்றுமொரு அமர்வு வெள்ளிக்கிழமை (12) மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

அவ்வணியின் செயலாளர் அ.காண்டீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரச உத்தியோகஸ்தர்கள், அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம பொது அமைப்புக்களின் அங்கத்தவர்கள், காணாமல் போனவர்களின் உறவினர்கள், யுத்ததினால் பாதிக்கப்பட்டவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

யுத்ததினால் பாதிக்கப்பட்வர்களுக்கு நிவாரணங்கள் வழங்க வேண்டும், காணாமல் போனர்களுக்கு உரிய நீதி கிடைக்கவேண்டும், காணாமல் போனர்களுக்கு மரணச் சான்றிழ் வழங்கப்படுவது தீர்வாக அமையாது, முன்னாள் போராளிகளுக்கு அரச தொழில்வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் போன்ற பல விடையங்களை அக்குழுவிடம் மக்கள் முன் வைத்திருந்தனர்.










SHARE

Author: verified_user

0 Comments: