7 Aug 2016

முற்போக்கான பார்வைக்கும் முழுமையான தீர்வுக்கும் தொடங்க வேண்டியது சமஷ்டியாட்சியும் - சிறிநேசன் எம்.பி.

SHARE
முற்போக்கான பார்வைக்கும் முழுமையான தீர்வுக்கும் இலங்கையில் தோல்வியடைந்த ஒற்றையாட்சியும், தொடங்க வேண்டிய சமஷ்டியாட்சியும் ஓற்றையாட்சி முறையால் நாம் பெற்றதெல்லாம் இவைகள்தான் என தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரவித்தார். இது தொடர்பில் ஞாயிற்றுக் கிழமை (06) விடுத்துள்ள அறிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது…

பேரினவாதமும், பிற்போக்கான கொள்கைகளும், மதவெறியும், மமதையான அதிகாரக் கெடுபிடியும்,சண்டையும், சாகடிப்புகளும், வறுமையும், வற்றிய வயிறுகளும், கண்ணீரும், கனதியான செந்நீரும், விதவைகளும், விதம் விதமான வதைகளும், அங்கவீனர்களும், அறுந்துபோன உறவுகளும், அந்தர வாழ்க்கையும், அகதியென்ற முகவரியும், மனிதவள அழிப்பும், மயானமாகிப்போன தேசமும், மறுக்கப்பட்டநீதிகளும், மறைக்கப்பட்டகுற்றங்களும்

சித்திரவதைகளும், செருக்கர்களின் கொக்கரிப்பும் ஊழல்களும், ஒருங்கிணைந்த மோசடிகளும், காணாமல் ஆக்கப்பட்டவர்களும், கண்டுகொள்ளாக் காவலர்களும்
பாரபட்சமும், பக்கச்சார்புகளும், ஓரநீதிகளும், ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரும்
கொண்டாடும் அதிகாரவர்க்கமும், திண்டாடும் ஏதிலிமக்களும் புலம் பெயர்ந்த புத்தி ஜீவிகளும், புதைக்கப்பட்ட தர்மங்களும் மூடப்பட்ட சிறைக்கதவுகளும், முனகிக்கிடக்கும் உறவுகளும் காமவெறியர்களும், கற்பிழந்தசீதைகளும் பாதாளக் கும்பல்களும், பயன்படுத்தும் அராஜக அரசியலும் சட்டவிரோதச் சுரண்டல்களும், சார்புநிலை அரசியலும் சூறையாடும் முதலாளிகளும், சுரண்டப்படும் தொழிலாளர்களும் பிரித்தாளும் சூழ்ச்சிகளும், பிரிக்கப்பட்ட சமூகங்களும் உதட்டளவுப் பேச்சுக்களும், உள்ளத்தில் குரோதங்களும் ஏமாற்றும் படுபாவிகளும்,ஏமாறும் அப்பாவிகளும் சிறுவர் துஷ்;பிரயோகங்களும், சீர்குலைந்த கலாசாரமும் போதைவஸ்துகளும், பொல்லாத மதுச்சாலைகளும் மந்தமான பொருண்மியமும், மறைகணியப்பாதீடும் குன்றிய அபிவருத்தியும், குறைமட்ட வருவாயும்

ஆதலால் ஓற்றையாட்சி முறைநாட்டுக்கும், நம்மக்களுக்கும்
தந்தெல்லாம் தோல்விகளும், தொடர் தீமைகளுமேயாம்
ஆளும் அதிகாரவர்க்கம் உழைப்பதற்கும், பிழைப்பதற்கும்
உகந்ததே ஒற்றையாட்சி முறைமையாகும்.

எனவே உலகில் வெற்றி பெற்ற சனநாயகசமஷ்டி முறைமையினை
உருப்படியாய் அரசியல் சாசனத்தில் உள்வாங்கிடுவோம்
சமஷ்டியின் மூலமாக, சமத்துவங்கள் பெற்றிடவும்
சகோதரத்துவம் தளைத்திடவும் இலங்கையரே வாருங்கள் இதயங்களைச் சேர்த்திடுவோம். சமஷ்டியால் வெற்றி பெற்றசாதனைச் தடயங்களைத்
தருகின்றேன்.

ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்ரேலியா, கனடா, சுவிஷ்லாந்து, பெல்ஜியம், இந்தியா  (அரைகுறைச் சமஷ்;டி) மீளுவோம், வாழுவோம் சமஷ்டியென்னும் கூட்டாட்சி மூலம் உங்களுக்கும், எங்களுக்கும் உகந்தோர் ஆட்சி சமஷ்டியாகட்டும்
நாமெல்லாம் இலங்கையர் என்பதற்கு நல்லதோர் சூத்திரம்
சமஷ்டியேயாம். இனியாவது சிந்திப்போம், இனியாவது இணைந்துவாழ்வோம். என அவர் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: