28 Aug 2016

மட்டக்களப்பில் வட்டியில்லாக் சிறுகடன் வழங்கும் வங்கி ஆரம்பித்து வைப்பு

SHARE
மட்டக்களப்பு ஜாமியுஸ் ஸலாம் ஜும்ஆ பள்ளி நிருவாகத்தின் ஏற்பாட்டில் வட்டியில்லா சிறு கடன் நிதி வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை
மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து 'ஸலாமா' எனும் காரியாலயம் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்திற்கு முன்னால் அமைந்துள்ள குறித்த பள்ளிவாயல் கட்டத்தில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இவ் வட்டியில்லா சிறு கடன் நிதி வழங்கும் திட்டம் முதற்கட்டமாக குறித்த பள்ளிவாயல் மஹல்லாவை சேர்ந்த மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
எதிர்காலத்தில் இது விஸ்தரிக்கப்பட்டு ஏனையோர்களுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பள்ளிவாயல் நிருவாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இக்காரியாலய திறப்பு விழா நிகழ்வில் பள்ளிவாயல் நிருவாகத்தினர், மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தக சங்க நிருவாகத்தினர், வர்த்தகர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

SHARE

Author: verified_user

0 Comments: