மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேசத்தில் காட்டு யானையின் தக்குதலுக்கிலக்காகி ஒருவர் மரணமடைந்துள்ளதாக
அப்பகுதி திடீர் மரணவிசாரணை அதிகாரி வடிவேல்-ரமேஸ்ஆனந்தன் தெரிவத்தார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…..
திங்கட் கிழமை (18) புலிபாய்ந்தகல் எனுமிடத்திலிருந்து, முறுத்தானைப் பகுதியில் அமைந்துள்ள காஞ்சிரங்காடு எனும் இடத்திலுள்ள அவர்களது வயலுக்கு தந்தையும் மகனும், மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
காட்டுப் பகுதியில் மறைந்துநிற்ற காட்டுயானை இவர்களை துரத்தியுள்ளது இதனால் மோட்டார் சைக்கிளை அவ்விடத்திலே விட்டுவிட்டு ஓடியவேளையில் குறித்த நபரை காட்டு யானை தாக்கியுள்ளது. இதனால் தலையில் பலத்த காயங்களுக்குள்ளான அவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் விவசாயியான 58 வயதுடைய 6 பிள்ளைகளின் தந்தையான சிவராசா மகேஸ்வரன் என்பரே மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் அப்குதி திடீர் மரணவிசாரணை அதிகாரி வ.ரமேஸ்ஆனந்தன், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகஸ்தர் எஸ்.ஏ.பி.பண்டார உள்ளிட்டோர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment