23 Jul 2016

நீரிழிவு விழிப்புணர்வு நிகழ்வு

SHARE
(இ.சுதா)

சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் வேண்டுகோளிற்கு அமைவாக முன் கூட்டியே நீரழிவு நோயினை இனங்காண்பதற்கான பொது விழிப்புணர்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை (22) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29) வரை மட்.பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் தினமும், காலை 8.மணிமுதல் 10 வரை நடைபெற்று வருகின்றது.

இவ்விழிப்பூட்டும் நிகழ்வில் முப்பது வயதிற்கு மேற்பட்டவர்களின் குளுக்கோசின் மட்டம் அளவிடப்பட்டு நீரிழிவு நோயுள்ளவர்களை இனங்காண்பதற்கான விசேட வேலைத்திட்டத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலுள்ளவர்கள் அனைவரையும் இதில் இணைந்து கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேட்டுள்ளார்

SHARE

Author: verified_user

0 Comments: