24 Jun 2016

திருகோணமலை மாவட்ட விவசாய குழுக்கூட்டம்

SHARE
திருகோணமலை மாவட்ட விவசாய குழுக்கூட்டம் நேற்று (23) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட
செயலாளருமான என்.ஏ.ஏ.புஷ்பகுமாரவின் தலைமையில் நடைபெற்றது.
விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தி மாவட்டத்தின் வவசாயத்துறையின் பங்களிப்பை அதிகரிக்கவே நாம் அனைவரும் மாதம் ஒருதடவை மாவட்ட விவசாய குழுக்கூட்டத்தில் ஒன்றினைவதாகவும் இதற்கு சம்பந்தப்பட்டவர்களினது பங்குபற்றல் மற்றும் பங்களிப்பு இன்றியமையாயதாக அமைவதாகவும் அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.

மாவட்டத்தில் நிலவுகின்ற விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம் மற்றும் அதனோடு தொடர்புடைய பல விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட விவசாய பணிப்பாளர் உபாலி ராஜபக்ச, பிரதேச செயலாளர்கள், துறைசார் தலைவர்கள் மற்றும் விவசாய சங்க தலைவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
SHARE

Author: verified_user

0 Comments: