9 Jun 2016

குமார் குணரட்னத்தை விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பில் கையெழுத்து வேட்டை

SHARE
 முன்னிலை சோஷலிசக் கட்சியின் அரசியற்குழு உறுப்பினரான குமார் குணரட்னத்தை விடுதலை செய்யுமாறு கோரி பொதுமக்களின் கையெழுத்துக்கள் இன்று மட்டக்களப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு ஆரயம்பதி சந்தைக்கு அருகாமையில் முன்னிலை சோஷலிசக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
குமார் குணரட்னத்தினை விடுதலை செய்யுமாறும், அவரின் குடியுரிமையை வழங்குமாறும் மற்றும் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடிவரவு – குடியகழ்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட குமார் குணரட்னத்திற்கு கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி ஒரு வருட சிறைத் தண்டனையும் 50,000 ரூபா அபராதமும் விதித்து கேகாலை நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: