19 Jun 2016

மங்கிகட்டு - வவுணதீவு விதீயின் புணரமைப்புப் பணிகள் ஆரம்பம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட மங்கிகட்டு  - வவுணதீவு விதீயினை புனரமைப்பு செய்யும் வேலைகள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான
ஞா.ஸ்ரீநேசனினால் வீதி அபிவிருத்தி அமைச்சிலிருந்து விஷேடமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மூலம் வேவைகள் சனிக்கிழமை (18) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

560 நீளம் கொண்ட இவ்வீதி புணரமைப்புக்கு 8 மில்லியன் ரூபாய் வீதி அபிவிருத்தி அமைச்சிலிருந்து விஷேடமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வீதியைப் புணரமப்புச் செய்வதனூடாக, மங்கிகட்டு, ஈச்சந்தீவு, நாவற்காடு, ஆயித்தியமலை, போன்ற கிராம மக்களும், மண்முனை மேற்கு பிரதேச செயலகம், மற்றும் அதனோடு இணைந்துள்ள அலுவலக உத்தியோகஸ்தர்களும், தமது போக்குவரத்துக்களில் ஈடுபடுவதற்கு இலகுவாக அமைகின்றது.

இதனை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து இதன் புணரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளனர்.





SHARE

Author: verified_user

0 Comments: