மட்டக்களப்பு கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் காரியாலய கட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(09) வியாழக்கிழமை மட்டக்களப்பு பயனியர் வீதியிலுள்ள திணைக்கள வளாகத்தில் நடைபெற்றது.
நீண்ட கால தேவையாக இருந்த இந்த அலுவலகத்தின் கட்டட அடிக்கல் நாட்டு விழா மட்டக்களப்பு மாவட்ட கால்நடை உற்பத்திச் சுகாதார திணைக்கள பிரதிப்பணிப்பாளர் டாக்டர் திருமதி உதயராணி குகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
21 மில்லியன் ரூபா செலவில் இரண்டு மாடிக் கட்டடமாக அமைக்கப்படவுள்ள இக் கட்ட அடிக்கல் நாட்டு விழாவில் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி, சுகாதார விவசாயத்துறை அமைச்சர் கே.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இந் நிகழ்வில், கால்நடை உற்பத்திச் சுகாதார திணைக்கள அதிகாரிகள், அமைச்சின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். இக்கட்டடம் இவ்வருட இறுதிக்குள் நிறைவடையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதிப்பணிப்பாளர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment