மகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி கபடிப் போட்டியில் முதலாமிடத்தினைப் பெற்று வெற்றியீட்டிய பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய மாணவர்களுக்கு கிழக்கு மகாண சாபை உறுப்பினர் கோ.கருணாகரம்(ஜனா) நேரில் சென்று தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்
மாணவரிடம் விளையாட்டுடன் மாத்திரம் நின்றுவிடாமல் கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதுடன், தேசியரீதியல் இடம் பெறும் போட்டிக்கு செல்வதற்கு உடன் தேவைப்படும் விளையாட்டு பொருட்கள் என்ன என்பதனை மாணவரிடம் வினாவியிருந்தார் இதன் போது மாணவர்கள் தங்களுக்கு விளையாட்டுக்கான பதணி, மற்றும் அதற்கான உடை என்பன அவசியமாக தேவைப்படுவதாக தெரிவித்தார் இவற்றினை உடன் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததுடன் அதிபரிடம் பாடசாலையில் விஞ்ஞானப் பிரிவினை நிறுவுவதில் என்ன தடைகள் உள்ளது என்பது சம்மந்தமாகவும் இதன் போது கேட்டறிந்து கொண்டார்
1 Comments:
Very good and have to work more on Education.
Sad thing is we own education ministry
Post a Comment