4 Jun 2016

வீதி விபத்தில் இளைஞர்கள் மூவர் படுகாயம்

SHARE
மட்டக்களப்பு, காத்தான்குடி -06, பிரதான வீதி, இரும்புத் தைக்கா பள்ளிவாயல் பகுதியில் வியாழக்கிழமை 02.06.2016 நள்ளிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று இளைஞர்கள்
படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் படுகாயமடைந்த மூவரும் உடனடியாக காத்தான்குடி ஆதாரா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் பாரதூரமான காயங்களுக்குள்ளான ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
காத்தான்குடி பிரதான வீதியினூடாக பயணித்த மோட்டார் சைக்கிளுடன் குறுக்கு வீதியிலிருந்து பிரதான வீதியில் இணைந்து கொண்ட மோட்டார் சைக்கிளும் மோதியே விபத்து சம்பவித்தது.

இவ்வேளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றும் சிறு சேதத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: