7 Jun 2016

தொழில்நுட்ப உத்தியோகத்தர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்

SHARE
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வழிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை அமுல்படுத்துவதற்கான
ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

ஒப்பந்த அடிப்படையில், 6 மாதங்களுக்கான இந்த நியமனங்களுக்குத் தகுதியானர்வர்கள் தமது சுயவிபரக்கோவை, சான்றிதழ்கள், சேவை அனுபவச் சான்றிதழ்கள் என்பவற்றுடன் புதன் கிழமை (8) பிற்பகல் 2 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேற்படி அமைச்சின் புதிய வீடமைப்புத் திட்டங்கள், வீடமைப்புத் திருத்தம், மலசலகூட வசதிகளை ஏற்படுத்தல், உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான வலைகளை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் நியமனம் செய்யப் படுகின்றனர்.

குறித்த நேர்முகப்பரீட்சை மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்படுகிறது.

SHARE

Author: verified_user

0 Comments: