மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நதியா பீச் (கடற்கரைப்) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 12.06.2016 அதிகாலை வேளையில் கஞ்சா சுருட்டுப் புகைத்துக் கொண்டிருந்த மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நபர்கள் போதை கலந்த கஞ்சாவுடன் நடமாடுவதாக பொதுமக்களிடமிருந்த தகவல் கிடைத்ததன் பேரில் தாம் நகர உலா சென்ற வேளையில் சுற்றிவளைப்பை மேற்கொண்டு கஞ்சா சுருட்டுப் புகைத்துக் கொண்டிருந்தவர்களைக் கைது செய்ததாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
இச்சம் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
0 Comments:
Post a Comment