களுதாவளை - கண்ணமுத்து ஆசிரியர் நிதியம் தரம் - 05 புலமைப்பரிசில் பரீட்சையில் பெறுபேறுகளை அதிகரிக்கும் நோக்குடன் முன்னோடிப்பரிட்சைக்கான வினாத்தாள் கையளிக்கப்பட்டன.
காலநிதி
கண்ணமுத்து சிதம்பரநாதன்
அவர்களால் அவரின்
தந்தையாரின் நினைவாக
உருவாக்ப்பட்ட கண்ணமுத்து ஆசிரியர்
நிதியமானது களுதாவளை
கிராமத்திற்கு மட்டுமன்றி
இப்பிரதேசத்தின் கல்வி மேம்பாட்டிற்காகவும் பல சேவைகளை
செய்து வருகின்றது.
அந்த
வகையில் 04.06.2016 அன்று பட்டிருப்பு வலயத்திற்கு
உட்பட்ட பாடசாலையில்
கல்வி பயிலும் தரம்
- 05 மாணவர்களுக்கான முன்னோடிப்பரிட்சை வினாத்தாள்கள் கையளிக்கும்
நிகழ்வு வலயக்கல்விப்
பணிப்பாளரின் ஆலோசனையின்
பெயரில் இடம்பெற்றது.
இந்
நிகழ்விற்கு பட்டிருப்பு
கோட்டக்கல்வி பணிப்பாளர்
வி.திரவியராஜா கண்ணமுத்து
ஆசிரியர் நிதியத்தின்
ஆலோசகரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.கனகசபை
முன்னாள் இலங்கை
வங்கி பிரதம முகாமையாளர்
. இரா. நல்லையா
கண்ணமுத்து ஆசிரியர்
நிதியத்தின் பொருளாளரல்
க.துசாந்தன், பட்டிருப்பு
கல்வி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் (ஆரம்ப பிரிவு
) மற்றும் பாடசாலை
ஆசிரியர்களும் பட்டிருப்பு
வலயக்கல்வி அலுவலக
கேட்போர் கூடத்தில்
வைத்து உத்தியோக பூர்வமாக
கையளித்தனர்.
0 Comments:
Post a Comment