மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் ஐயனார் ஆலயத்திற்கு அருகாமையில் ஞாயிற்றுக் கிழமை மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதில் இளைஞர் ஒருவர் படுகாயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
அம்பாறை இறக்காமத்தில் இருந்து கந்தளாய் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பயணம் செய்த எம்.சியாம் படுகாயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விடத்திற்கு வந்த காத்தான்குடி போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment