15 May 2016

சாதனையாளர் கௌரவிப்பு விழா

SHARE
மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற வந்தாறுமூலை அறநெறிப் பாடசாலை மாணவர்களின் சாதனையாளர் கௌரவிப்பு விழா ஞாயிறன்று 15.05.2016 வந்தாறுமூலை இந்து இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலை பொறுப்பாசிரியர் பி. சசிதரன் தலைமையில் வந்தாறுமூலை விஷ்ணு மஹா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற வந்தாறுமூலை அறநெறிப்பாடசாலையின் 2015 ஆம் வருட பரீட்சைகள் மற்றும் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான, தரம் 5, கபொத சாதாரண தரம் மற்றும் உயர் தரங்களில் சிறந்த பெறுபேற்றை பெற்றவர்களுக்கான ஞாபகார்த்த சின்னம் மற்றும் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.


இந் நிகழ்விற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி ஈ. சிறிகாந்த், கோட்டக்கல்வி அதிகாரி யூ.பி. சிவகுரு உள்ளிட்ட இன்னம் பலஅதிகாரிகளும் பெற்றோரும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.












SHARE

Author: verified_user

0 Comments: