மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி சிகரம் கிராமத்தில் எட்டு வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மே 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை 03.05.2016 மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.ஐ.எம். றிஷ்வி முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ள சிறுமியின் மாமா முறையான சிறுவனை மே மாதம் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளானதாகக் கூறப்படும் சிறுமி திங்கட்கிழமை 02.05.2016 அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்காக ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்கும் பரிசோதனைக்குமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
கடந்த ஒரு வருடகாலமாக சிறுமி மீதான பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்று வந்துள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment