21 Apr 2016

இலங்கை நிருவாக சேவையில் கால்நூற்றாண்டை கடந்தார் மாணிக்கவாசகம் தயாபரன்

SHARE
 இலங்கை நிருவாக சேவையில் கால்நூற்றாண்டை கடந்தார் மாணிக்கவாசகம் தயாபரன் தற்போது வெருகல் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக கடமையாற்றிவரும் இவருக்கு அரது பிரதேச செயலக ஊழியர்கள் பாராட்டு விழாவினை எற்பாடு செய்து பிரமாண்டமாக நடாத்தியிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தருள் மிகவும் துடிப்பாகவும், விவேகமாகவும், துணிச்சலாகவும் செயற்படக் கூடியவர் என்பதற்கு அவர்பணிபுரிந்த இடங்கள் சான்றாகும், இவரின் துணிச்சலுக்கு சிறந்த உதாரணம் ஒன்றினை முன்வைக்க வேண்டும் இதனை மாவட்ட அரசியல்வாதிகள் அறிய வேண்டும். மாவட்ட புனர்வாழ்வு பணிப்பாளராக கடமையாற்றும் போது மீள் குடியேற்றம் தொடர்பாக மட்டக்களப்பு கச்சேரியில் பசில்ராஜபக்ச தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் அப்போதைய அரசாங்க அதிபர் அகதிகள் அனைவரும் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர் எனப் பொய்கூற  அனைமறுத்து உண்மையான தரவினை காட்டி  மீள் குடியேற்றம் பூரணமாக இடம் பெவில்லை அகதி முகாங்களில் எமது மக்கள் வாழ்கின்றனர் எனச் சுட்டிக்காட்டி தமிழ் மக்களுக்காக அப்போதைய அரசுடன் விவாதத்தில் ஈடுபட்டவர் இதற்காக பசில்ராஜபக்ச அவரினை எச்சரித்திருந்தார் இதைப்போன்று பலதைக் கூறலாம். இது எத்தனை பேருக்குத் தெரியும்  
  
நிருவாகத்துறைசார்ந்த பட்டப்படிப்பினை பிரித்தானியால் மேற்கொண்டவர். பிரதேச செயலாளர், உள்ளுராட்சி உதவியாணையாளர், மாவட்டபுனர்வாழ்வு பணிப்பாளர், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், கிழங்குபல்கலைக்கழக பதிவாளர், மத்தியவங்கியின் கிழக்கு மாகாண வறுமையொழிப்புத்திட்ட பணிப்பாளர் போன்ற பதவிகளில் இருந்த திறப்பட செயற்பட்டவர்.

பதவி இவரை அலங்கரிப்பதில்லை  இவராலேயே பதவி அலங்கரிக்கப்படுகின்றது மூம்மொழிகளில் தேர்;ச்சிபெற்ற இந்த அதிகாரி எப்போதாவது ஒரு நாள் எமது மாவட்டத்தில் சேவையாற்றுவதற்கு வழிசமைப்போம். அவரின் சேவைதொடர வாழ்த்துகின்றோம்







SHARE

Author: verified_user

0 Comments: