கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கத்தின், பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் மட்.மாவடிவேம்பு விக்ணேஸ்வரா வித்தியாலயத்திற்கு நிழற்பிரதியெடுக்கும் இயந்திரம் ஒன்று திங்கட் கிழமை (01) வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் கலந்து கொண்டதுடன் கோட்டைக் கல்வி அதிகாரி சிவகுரு, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தங்கவேல் மற்றும் கல்விசார் அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதன் போது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களும் அதிதிகளால் கொளரவிக்கப்பட்டனர்.
0 Comments:
Post a Comment