4 Feb 2016

மட்டக்களப்பில் காணாமல்போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

SHARE
மட்டக்களப்பில் காணாமல் போனோரின் உறவினர்கள் சுதந்திர தினத்தை புறக்கணித்து பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் வீதி மறியல் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு காணாமல் போனோரின் உறவினர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்பாட்டம் மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் இடம் பெற்றது.
காணாமல் போன உறவினர்களை கண்டுபிடித்து தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசங்களை எழுப்பினர்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: