கடந்த 6 தசாப்தங்களாக ஊடகத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்த மூத்த பத்திரிகையாளர் குமாரவேலு கந்தர் இரத்தினசிங்கம் தனது 87ஆவது வயதில் நேற்று (10) இயற்கை எய்தினார்.
அவருடைய இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணம் கச்சேரி வீதியிலுள்ள அன்னாரது இல்லத்த்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கிரியைகள் இன்று (11) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரன் பத்திரிகையினூடாக தனது ஊடகப்பயணத்தை ஆரம்பித்த இரத்தினசிங்கம் ஐயா, வீரகேசரி பத்திரிகையின் உதவியாசிரியராகவும், தினபதி, சிந்தாமணி, சூடாமணி, ஆகிய பத்தரிகைகளின் இணை ஆசிரியராகவும், சுடர்ஔி பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் நீண்ட காலம் பணியாற்றினார்.
ஊடகவியலாளர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்த அரசியல் லாபங்கள், சுயநலங்களுக்காக சோரம் போகாமல், இலங்கையின் தமிழ் ஊடகத்துறைக்கு அளப்பறிய சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment