21 Jan 2016

தேசிய விளையாட்டு வாரத்தினை முன்னிட்டு கல்முனையில் விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள்.

SHARE
(ஏ.எல்.எம்.சினாஸ்)
தேசிய விளையாட்டு வாரத்தினை முன்னிட்டு எதிர்வரும் ஜனவரி 30ம் திகதி பிரமாண்டமான விளையாட்டுப் போட்டிகள் கல்முனை சந்தாங்கோணி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இது சம்மந்தமாக திணைக்கள தலைவர்கள் மற்றும் துறைசார்ந்தவர்களுடனான கலந்துரையாடல் (2016.01.19) கல்முனை பிரதேச செயலகத்தில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் கௌரவ எச்.எம்.எம்.ஹரிஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.சலீம், கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டப்ளியு.ஹப்பார் உட்பட விளையாட்டு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.  திணைக்களங்களுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டி, 100 மீற்றர், 200 மீற்றர், தடைதாண்டல் என பல மைதான போட்டி நிகழ்ச்சிகள் அன்றைய தினம் நடைபெறவுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: