திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் சகல தர ஊழியர்களுக்குமான இலவச மருத்துவ பரிசோதனையொன்று இன்று (02) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
சகல ஊழியர்களும் காலை முதல் வரிசைக் கிரமமாக நின்று பரிசோதனையை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டினர்.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் நிஸ்ஸங்க புஷ்பகுமார, மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராசா, உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன், உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் இப்பரிசோதனையில் கலந்து கொண்டார்கள்.
இவ்வைத்திய பரிசோதனையை திருகோணமலை மாவட்ட செயலக நலன்புரி அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. மொத்தமாக 175 க்கு மேற்பட்டோர் இவ்வைத்திய முகாமில் கலந்து சிறப்பித்ததாக திருகோணமலை மாவட்ட செயலக நலன்புரி அமைப்பின் தலைவர் எச்.சன்ஜீவ தெரிவித்தார்.
இவ்வைத்திய பரிசோதனையை திருகோணமலை மாவட்ட செயலக நலன்புரி அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. மொத்தமாக 175 க்கு மேற்பட்டோர் இவ்வைத்திய முகாமில் கலந்து சிறப்பித்ததாக திருகோணமலை மாவட்ட செயலக நலன்புரி அமைப்பின் தலைவர் எச்.சன்ஜீவ தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment