சட்ட விரோதமாகக் கொண்டு சென்ற எருமை மாடுகளை இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
இவ்விடையம் மொடர்பில் மேலும் அறியவருவதாவது…..
காத்தான்குடி பகுதியிலிருந்து கல்முனை நோக்கி கொண்டு சென்ற 11 எருமை மாடுகளை இன்று சனிக்கிழமை களுவாஞ்சிகுடியில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட எருமை மாடுகளையும், அவற்றைக் கொண்டு சென்ற 2 நபர்களையும், எருமை மாடுகளை ஏற்றிச் சென்ற வாகனத்தையும், திங்கட் கிழமை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment