திருகோணமலை மாவட்டத்தில் வெளிக்கள அரச ஊழியர்களாக கடமையாற்றும் பெண் உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு இன்று (16) திருகோணமலை சங்கமித்த விடுதி வளாகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமாரவின் தலைமையில் நடைபெற்றது.
கடந்த வருடம் டிசெம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் பணம் செலுத்திய 492 பேருக்கு மோட்டார் சைக்கிள்கள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரினால் உத்தியோகபூர்வமாக இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
அரச ஊழியர்கள் தமது கடமைகளை செவ்வனே செய்வதற்கும் மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதற்கும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுவதாகவும் அரசாங்கம் தொடர்ந்தும் மோட்டார் சைக்கிள் கிடைக்காத அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கும் என்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் இதன்போது தெரிவித்தார்.
வரவு செலவுத்திட்ட முன்மொழிவுக்கமைய இம்மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அரச ஊழியர்கள் தமது கடமைகளை செவ்வனே செய்வதற்கும் மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதற்கும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுவதாகவும் அரசாங்கம் தொடர்ந்தும் மோட்டார் சைக்கிள் கிடைக்காத அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கும் என்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் இதன்போது தெரிவித்தார்.
வரவு செலவுத்திட்ட முன்மொழிவுக்கமைய இம்மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment