41 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் கரப்பந்து போட்டி நாளை மறுநாள் (21) மாலை 4.00 மணிக்கு திருகோணமலை நகர கடற்கரையில் நடைபெறவுள்ளது.
பிரதி விளையாட்டுத்துறை அமைச்சர் எச்.எம்.எம். ஹாரிஸ் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் குழுக்களை பதிவு செய்யும் நடவடிக்கை நாளை(20) பி.ப 2.00 யிலிருந்து - 7.00 மணி வரை நடைபெறும்.
இம்முறை தேசிய கரப்பந்து போட்டியில் 9 மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தி மாகாணத்திற்கு 2 குழுக்கள் என்ற வகையில் பங்குபற்றவுள்ளன.
பரிசளிப்பு விழா பிரதி விளையாட்டுத்துறை அமைச்சர் எச்.எம்.எம்.ஹாரிஸ் மற்றும் கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி ஆகியோர் தலைமையில் எதிர்வரும் 22 ஆம் திகதி 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது
பரிசளிப்பு விழா பிரதி விளையாட்டுத்துறை அமைச்சர் எச்.எம்.எம்.ஹாரிஸ் மற்றும் கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி ஆகியோர் தலைமையில் எதிர்வரும் 22 ஆம் திகதி 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது
0 Comments:
Post a Comment