7 Nov 2015

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசம் 11 வட்டாரங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 45 கிராம சேவையாளர் பிரிவுகளும் 11 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டு, மாகாண சபைகள், மற்றும், உள்ளுராட்சி அமைச்சிலிருந்து தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் தெரிவித்துள்ளார்.
மண்முனை என் எருவிப் பற்று பிரதேச செயலார் பிரிவு தற்போதைய நிலையில் எத்தனை வட்டாரங்களாதகப் பிரிக்கப் பட்டுள்ளது என இன்று சனிக்கிழமை (07) மேற்படி பிரதேச செயலாளரைத் தொடர்பு கொண்டு கேட்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வட்டார முறைத் தேர்தலாக நடைபெறும் என பலராலும் எதிர் பார்க்கப் படுகின்ற இந்நிலையில் பிரதேசம் வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 45 கிராம சேவையாளர்களைக் கொண்டமைந்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவு 11 வட்டாரங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம மேலும் தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: