24 Oct 2015

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் பட்டையக் கற்கை நெறிக்கான ஆரம்பக் கருத்தரங்கு

SHARE
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்தும் மட்டக்களப்பு மாவட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் பட்டையக் கற்கை நெறிக்கான ஆரம்பக் கருத்தரங்கு இன்று சனிக்கிழமை (24) மட்டக்களப்பு – நாவற்குடா இந்;து காலாசார காலாசார மண்டபத்தில் ஆரம்பமானது.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப்ப ணிப்பாளர் ஹேமலோஜினி குமரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீழ்குடியேற்ற மற்றும் புணர்வாழ்வு புணரமைப்பு இந்து விவகார அமைச்சின் புணர்வாழ்வு அதிகார சபையின் பணிப்பானர் என்.புவனேந்திரன் இதன்போது வளவாளராகக் கலந்து கொண்டு அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கு விளக்கங்களை வழங்கினார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுமார் நூறுக்கு மேற்பட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர். இக்கருத்தரங்கு நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது.


















SHARE

Author: verified_user

0 Comments: