2015ம் ஆண்டுக்கானசைவப்புலவர் மற்றும் இளஞ்சைவப்புலவர் தேர்வில் மட்டக்களப்பைச் சேர்ந்தகணவன் மனைவியர் இருவரும் சித்தி.
அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம் நடத்தும் 2015ம் ஆண்டுக்கானசைவப்புலவர் மற்றும் இளஞ்சைவப்புலவர் தேர்வில் மட் குறுமன்வெளிக் கிராமத்தைப் பிறப்பிடமாகவும்
கல்லடி மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட சோதிடர் சிவனேசராசா சிவராஜா என்பவர் சைவப்புலவர் தேர்விலும் அவரது மனைவியான திருமதி சிவமோகனசுந்தரி சிவராஜா இளஞ்சைவப்புலவர் தேர்விலும் சித்தி பெற்றுள்ளனர்.
திங்கட் கிழமை (25) யாழ் கீரிமலை சிவப+மி மடாலய மண்டபத்தில் உள்ள சிவத்தமிழ்ச ;செல்வி சைவப் புலவர் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இவர்களுக்கான பட்டமளிப்பு வழங்கப்பட்டது.
இதன்போது 6 பேர் சைவப்புலவர்களாகவும் 16 பேர் இளஞ்சைவப் புலவர்களாகவும் பட்டமளிக்கப்பட்டனர். இம்முறைநடாத்தப்பட்ட சைவப்புலவர் தேர்வில் சோதிடர் சிவனேசராசா சிவராஜா என்பவர் மாத்திரமே கிழக்குமாகாணத்தில் இருந்து சித்திபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment